எதிர்ப்பை மீறி கோவிலின் சுவர் இடிக்கப்பட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்த பலரும் ஓம் நமச்சிவாய என்ற முழக்கங்களை எழுப்பி கண்ணீர் விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள் சாலை விரிவாக்க பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை காளப்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த சுயம்புவாய் காட்சியளிக்கும்சிவன் கோவிலை சாலை விரிவாக்க பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் இன்று இடித்தது. இடிப்பதற்கு முன்னதாகவே அங்கு வந்த ஜேசிபி வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் கோவிலின் சுவர் இடிக்கப்பட்டது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பு சேர்ந்த பலரும் ஓம் நமச்சிவாய என்ற முழக்கங்களை எழுப்பி கண்ணீர் விட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.