பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2022-23) பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க இன்று (3-ம் தேதி) கடைசி நாள் ஆகும்.
பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு 1,238 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 741 ஆகும்.
மேலும், இது குறித்து விவரங்களை, www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கலந்தாய்வு இணைய வழியாக மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள், எதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2022-23) பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை, சமர்ப்பிக்க இன்று (3-ம் தேதி) கடைசி நாள் ஆகும்.
பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு 1,238 பேர் விண்ணப்பித்துள்ளனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 741 ஆகும்.
மேலும், இது குறித்து விவரங்களை, www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கலந்தாய்வு இணைய வழியாக மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்கள், எதேனும் சந்தேகம் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.