பொள்ளாச்சி குட்டையில்‌ ஆக்கிரமிப்பு மற்றும்‌ சட்டவிரோத செயல் நடவடிக்கை எடுக்க கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம்..!

கிருஷ்ணசாமி லே அவுட்‌ குடியிருப்பு வாசிகள்‌ தூர்வாரப்பட்ட குட்டையில்‌ மீண்டும்‌ கட்டிட இடிபாடுகளை கொட்டி‌ ஒரு பகுதியை மூடிவிட்டனர்‌. ஆக்கிரமிப்பு மற்றும்‌ சட்டவிரோத செயலை ஆராய்ந்து அரசுப்பதிவேடுகளில்‌ நடந்த முறைகேடுகளை விசாரித்து குட்டையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம்‌, பொள்ளாச்சி வட்டம்‌ டி.கோட்டம்பட்டி கிராமத்தில்‌ உள்ள குட்டையில்‌ ஆக்கிரமிப்பு மற்றும்‌ சட்டவிரோத செயலில்‌ ஈடுபடுபவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்‌ எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறியதாவது:-

கோவை மாவட்டம்‌ பொள்ளாச்சி வட்டம்‌ டி.கோட்டாம்பட்டி வார்டு எண்‌.H, பிளாக்‌ எண்‌ 3 நகர அளவை எண்‌ 13-இல்‌ சுமார்‌ நான்கு தலைமுறைகளுக்கு மேலாக மழைநீர்‌ தேங்கி குட்டையாக இருந்து வருகின்றது.

இதனருகில்‌ விவசாய நிலங்கள்‌ உள்ளன. இக்குட்டையானது அரசு பதிவேடுகளில்‌ மந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1990 இல்‌ ஒரு பகுதி விவசாய நிலங்கள்‌ வீட்டு மனைகளாக மாற்றப்பட்டது.

இது தற்போது கிருஷ்ணசாயி லே அவுட்டாகவும்‌ மகாலட்சுமி நகராகவும்‌ உள்ளது. மேற்பட 1995 - 1996 இல்‌ நடந்த ஆய்வில்‌ மந்தையானது சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இக்குட்டையின்‌ அருகில்‌ வார்டு எண்‌:H, பிளாக்‌ எண்‌:3 நகர அளவை எண்‌:12 இல்‌ ஏற்கனவே தமிழ்நாடு அரசின்‌ நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில்‌ வார்டு எண்‌:H‌ பிளாக்‌ எண்‌:3 நகர அளவை எண்‌:13 இல்‌ உள்ள குட்டை பகுதி சாலையாக மாற்றப்பட்டுள்ளது ஏற்க இயலாது.

மேலும்,‌ கிருஷ்ணசாமி லே அவுட்‌ மற்றும்‌ மகாலட்சுமி நகர்‌ குடியிருப்பு வாசிகள்‌ இக்குட்டையை கழிவுநீர்‌ குட்டையாக மாற்றியது மட்டுமல்லாமல்‌ கட்டிட இடிபாடுகளைக்‌ கொண்டு தொடர்ந்து மூடிவருகின்றனர்‌. தமிழ்நாடு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்த மெகா தூய்மைப்பணித் திட்டத்தின்‌ கீழ்‌ 20.09.2021 லிருந்து 25.09.2021 வரை இக்குட்டை தூர்வாரப்பட்டது.

இந்நிலையில்‌ 28.12.2021 அன்று அருகில்‌ வசிக்கும்‌ கிருஷ்ணசாமி லே அவுட்‌ குடியிருப்பு வாசிகள்‌ மீண்டும்‌ கட்டிட இடிபாடுகளை கொட்டி இக்குட்டையின்‌ ஒரு பகுதியை மூடிவிட்டனர்‌. எனவே இங்கு மேற்கொள்ளப்படும்‌ சட்டவிரோத செயலை ஆராய்ந்து அரசுப்பதிவேடுகளில்‌ நடந்த முறைகேடுகளை விசாரித்து குட்டையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு கோவை குளங்கள்‌ பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்‌ புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...