பொள்ளாச்சி அருகே போலீஸ் அதிரடியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

பொள்ளாச்சி அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்த போலீசார், வாகனங்கள், 30 சேவல்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக சேவல் சண்டை மூலம் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இதனையடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் காளியாபுரம் பகுதியில் லோகநாதன் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு விரைந்த போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 பேர் பிடிபட்டனர்.



அவர்களிடமிருந்து கார், சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனம் என 36 வாகனங்களும், 30 சேவல்களும், ரூபாய் 13 ஆயிரத்து 360 பணம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதனையடுத்து 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் கைது செய்து வைத்திருந்த, 22 வயதான கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கண்ணாடியை உடைத்து, தனது கைகளில் காயத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவரை புரவிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்ததால் மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...