கோவை அரசு பள்ளிக்கு தேவையான அறிவியல் கருவிகளை வாங்க உதவித்தொகை வழங்கிய தன்னார்வலர்கள்...!

ஒத்தகால்மண்டபம் அரசு பள்ளி அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகள் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில், அவற்றை வாங்க "கோவை ஆஸ்ட்ரோ கிளப்" என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் உதவி தொகையை ஆட்சியர் முன்னிலையில் வழங்கினர்.


கோவை: கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில், ஒத்தகால்மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள், தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு தொலை நோக்கி உட்பட சிறப்பு கருவிகள், தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் தேவையை அறிந்த, "கோவை ஆஸ்ட்ரோ கிளப்" என்ற அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், மாணவர்கள் குறிப்பிட்ட கருவிகளை வாங்குவதற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் முன்னிலையில், அப்பள்ளி மாணவர்களிடம் வழங்கினர்.

மேலும், கோவை ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் 5 செயற்கை முப்பரிமான கருவியையும் (Virtual Reality) அப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.



இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பேராசிரியர் சக்திவேல், பள்ளி ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தேவையான தொகையினை வழங்கிய தன்னார்வலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...