14-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 65-வயது முதியவருக்கு 11 ஆண்டு சிறை, 10 ஆயிரம் அபராதம்

கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் - 65-வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65) என்ற முதியவரை கோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அனைத்து வாதங்களும் கேட்கப்பட்டு வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் ராமகிருஷ்ணனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு பெற்ற போலீசாரை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...