கோவையில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் - 65-வயது முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார்.
கோவை: கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (65) என்ற முதியவரை கோமங்கலம் போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அனைத்து வாதங்களும் கேட்கப்பட்டு வழக்கின் விசாரணை நிறைவடைந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் ராமகிருஷ்ணனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு பெற்ற போலீசாரை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.