கோவையில் மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: 10-க்கும் மேற்பட்டோர் கைது..!

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.



கோவை: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை காந்திபுரம் பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.



கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதில், கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி மாநகர போலீசில் மனு அளித்தனர். ஆனால் ஶ்ரீமதி மரணம் தொடர்பான போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் கூடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீஸ் தடையை மீறி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பிகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...