பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக குட்கா புகையிலை பொருட்களை அரசு தடை உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறையில் ரூ.10 ஆயிரமும் மற்றும் மூன்றாவது முறை பிடிபட்டால் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெட்டி கடை, மளிகை கடைகளில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 7 கடைகளில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக குட்கா புகையிலை பொருட்களை அரசு தடை உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறையில் ரூ.10 ஆயிரமும் மற்றும் மூன்றாவது முறை பிடிபட்டால் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெட்டி கடை, மளிகை கடைகளில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 7 கடைகளில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.