கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை 2 கடைகளுக்கு சீல் 7 கடைகளுக்கு அபராதம்

பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குட்கா புகையிலை பொருட்களை அரசு தடை உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறையில் ரூ.10 ஆயிரமும் மற்றும் மூன்றாவது முறை பிடிபட்டால் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெட்டி கடை, மளிகை கடைகளில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 7 கடைகளில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...