கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை 2 கடைகளுக்கு சீல் 7 கடைகளுக்கு அபராதம்

பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குட்கா புகையிலை பொருட்களை அரசு தடை உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து மாவட்டத்தில் குட்கா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு முதல் முறை பிடிபட்டால் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறையில் ரூ.10 ஆயிரமும் மற்றும் மூன்றாவது முறை பிடிபட்டால் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெட்டி கடை, மளிகை கடைகளில் திடிரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 7 கடைகளில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பல முறை எச்சரித்தும், தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் குட்கா விற்பனை தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...