திருப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்..!

கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்க காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் நெசவாளர் காலனியில் வசித்து வரும் நெசவாளர்களுக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு மடத்துக்குளம் தாலுக்கா தாந்தோணி கிராமத்தில் உள்ள நிலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரசு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்களிப்புத் தொகையுடன் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வந்த சூழ்நிலையில் மேற்படி இடத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு முடிவுற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.



ஆனால், காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சியரின் அறிவிப்பையும் மீறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...