திருப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம்..!

கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்க காலதாமதம் செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் நெசவாளர் காலனியில் வசித்து வரும் நெசவாளர்களுக்கு கடந்த 1999-ஆம் ஆண்டு மடத்துக்குளம் தாலுக்கா தாந்தோணி கிராமத்தில் உள்ள நிலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரசு மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்களிப்புத் தொகையுடன் இடம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வந்த சூழ்நிலையில் மேற்படி இடத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு முடிவுற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.



ஆனால், காங்கேயம் தனி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் தொடர்ந்து காலதாமதம் செய்து வரக்கூடிய சூழ்நிலையில் இதுகுறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியரும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சியரின் அறிவிப்பையும் மீறி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் காங்கேயம் தனி வட்டாட்சியர் காலதாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலகத்தை கைத்தறி நெசவாளர்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...