தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை கண்டித்து கோவை பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணத்தை உயர்த்தி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குருசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...