பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணத்தை உயர்த்தி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குருசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணத்தை உயர்த்தி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குருசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.