தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை கண்டித்து கோவை பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், தொண்டாமுத்தூர், ஆகிய தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து பதாதைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் சொத்துவரியை உயர்த்தி, மின் கட்டணத்தை உயர்த்தி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு மக்கள் விரோத ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், நகரமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குருசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...