பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 50-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒவரை கைது செய்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37) என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37) என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.