கோவை பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்..!

பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 50-கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒவரை கைது செய்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரில் தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அவரிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (37) என்பதும் தெரியவந்தது.



பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சுமார் 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...