திருப்பூர் அருகே ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது -5 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, 5-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ரயிலில் திருப்பூருக்குக் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபரை திருப்பூர் அருகே ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயிலில் வாலிபர் ஒருவர் திருப்பூருக்கு கஞ்சா கடத்துவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கோவை ரயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலீசார் ராஜலிங்கம், சையது மொகமது, கோபால், சுரேஷ், சுஜித் உள்ளிட்டோர் நேற்று காலை ஈரோட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த தன்பாத்-ஆலப்புழா ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெட்டியில் ஒரு பையுடன் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரையிடம் ஒப்படைத்தனர். அவர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒடிசா மாநிலம் பர்கார்த் பகுதியை சேர்ந்த சதானந்தா படேய் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...