கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர்: கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கடந்த மூன்று அலைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து, 279 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 352 பேர் இறந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 18 வயது உட்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி 82 சதவிதமும், 2ம் தவணை 67 சதவிதமும் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்கள் கழித்து போஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இந்த பூஸ்டர் தடுப்பூசியானது கடந்த 15-ந்தேதி முதல் இலவசமாக அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் கொரோன தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கடந்த மூன்று அலைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து, 279 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 352 பேர் இறந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 18 வயது உட்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி 82 சதவிதமும், 2ம் தவணை 67 சதவிதமும் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்கள் கழித்து போஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இந்த பூஸ்டர் தடுப்பூசியானது கடந்த 15-ந்தேதி முதல் இலவசமாக அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் கொரோன தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.