திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம்

கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பூர்: கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கடந்த மூன்று அலைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து, 279 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 352 பேர் இறந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 18 வயது உட்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி 82 சதவிதமும், 2ம் தவணை 67 சதவிதமும் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்கள் கழித்து போஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த பூஸ்டர் தடுப்பூசியானது கடந்த 15-ந்தேதி முதல் இலவசமாக அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் கொரோன தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...