திமுக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு பொது மக்களின் கவனத்தை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி வருவதாக முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் பேட்டியில் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பெரிய கடைவீதியில் உள்ள மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக தொடர்ந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்த போது எந்த விதமான கட்டணத்தையும் உயர்த்தாத நிலையில் திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்திருப்பதாகவும், திமுக அரசின் மீது உள்ள கோபத்தை காட்டும் வகையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் எனவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...