திருப்பூர் வேலம்பாளையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் நடைபெற்ற பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர், அதனையடுத்து மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தீவிர படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும்,அந்தந்த பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பின்லாடை நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர், அதனையடுத்து மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தீவிர படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும்,அந்தந்த பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பின்லாடை நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.