வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் காவல்துறை

திருப்பூர் வேலம்பாளையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில் நடைபெற்ற பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவரங்களை பின்னலாடை நிறுவனங்கள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க மாநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர், அதனையடுத்து மாநகர காவல் துறை சார்பில் திருப்பூர் மாநகரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை தீவிர படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று வேலம்பாளையம் காவல் நிலையத்தில் மாநகர காவல் உதவி ஆணையர் அனில்குமார் தலைமையில், பின்னலாடை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும்,அந்தந்த பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் பின்லாடை நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...