ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு யோகா மற்றும் தியான வகுப்புகளில் கலந்துக் கொள்ள நாட்டின் பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்து வகுப்புகளில்
பங்கேற்று வருகின்றனர். முறையாக யோகா மற்றும் தியானம் கற்பதன் மூலம் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை நல்வழியில் பேண முடியும் என்பதால், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஈஷாவின் வகுப்புகளில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கொள்ளு ரமணா (32). இவர்மன அழுத்தம் காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில்சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த ஒரு மாதமாக ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்த ரமணா, நேற்றிரவு ஈஷாவிலுள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலாந்துறைபோலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.