44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்க கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ளதையொட்டி, அதற்கான ஜோதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்லபடவுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி, அந்த ஜோதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், கவிதா மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...