வார்டு எண் 22 சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க தன் சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ள கவுன்சிலர் பாபுவிற்கு மேயர் மற்றும் துணை மேயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை சேரன் மாநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க, மாமன்ற உறுப்பினர் பாபு, தனது சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ளது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

நேற்று, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக் குழு கலந்தாய்வு கூட்டம், தலைவர் மாலதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலை குழு உறுப்பினர், கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக ரோபோடிக் பயிற்சி உபகரணங்களை (robotic kit) வாங்க தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் (1,05,000) வழங்குவதாக, கூறினார்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு ஒரு ஆண்டுக்கான ஊதியம் (2022 - 2023) ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) ரூபாயை அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த கணேஷ் என்பவர் நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்து, மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க கல்விக்குழு அனுமதியளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
அவரது நடவடிக்கைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவராம் நகர் பூங்காவில் உள்ள மியாவாக்கி திட்டத்தில் மரங்களைச் சீரமைப்பது, சேரன் மாநகர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் இதர அடைப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகர மேயரிடம் மனுக்களை, மாமன்ற உறுப்பினர் பாபு அளித்தார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக் குழு கலந்தாய்வு கூட்டம், தலைவர் மாலதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலை குழு உறுப்பினர், கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக ரோபோடிக் பயிற்சி உபகரணங்களை (robotic kit) வாங்க தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் (1,05,000) வழங்குவதாக, கூறினார்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு ஒரு ஆண்டுக்கான ஊதியம் (2022 - 2023) ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) ரூபாயை அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த கணேஷ் என்பவர் நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்து, மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க கல்விக்குழு அனுமதியளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
அவரது நடவடிக்கைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவராம் நகர் பூங்காவில் உள்ள மியாவாக்கி திட்டத்தில் மரங்களைச் சீரமைப்பது, சேரன் மாநகர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் இதர அடைப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகர மேயரிடம் மனுக்களை, மாமன்ற உறுப்பினர் பாபு அளித்தார்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.