வெளிநாட்டு வாழ் இந்தியர் மற்றும் கவுன்சிலரின் நிதி உதவியால், சேரன் மாநகர் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி...!

வார்டு எண் 22 சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க தன் சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ள கவுன்சிலர் பாபுவிற்கு மேயர் மற்றும் துணை மேயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சேரன் மாநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க, மாமன்ற உறுப்பினர் பாபு, தனது சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ளது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.



நேற்று, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக் குழு கலந்தாய்வு கூட்டம், தலைவர் மாலதி தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்தில், கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலை குழு உறுப்பினர், கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக ரோபோடிக் பயிற்சி உபகரணங்களை (robotic kit) வாங்க தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் (1,05,000) வழங்குவதாக, கூறினார்.



மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு ஒரு ஆண்டுக்கான ஊதியம் (2022 - 2023) ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) ரூபாயை அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த கணேஷ் என்பவர் நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்து, மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க கல்விக்குழு அனுமதியளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

அவரது நடவடிக்கைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவராம் நகர் பூங்காவில் உள்ள மியாவாக்கி திட்டத்தில் மரங்களைச் சீரமைப்பது, சேரன் மாநகர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் இதர அடைப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகர மேயரிடம் மனுக்களை, மாமன்ற உறுப்பினர் பாபு அளித்தார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...