பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மைய பகுதியில் வனத்துறை அமைச்சர் ஆய்வு

கோவை, பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை, பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.



தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வனமரபியல் மண்டலம் பெத்திக்குட்டை ஆராய்ச்சி மையத்தில், வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுப்பதற்காக உயிர் வேலியாக ரயில்கள்ளி (cereus pterogonus), மற்றும் சொரமுள் (Sylindropuntia ramosissima) ஆகிய முட்செடிகளைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து கோவை வனக்கோட்டம்,சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை சுற்று வனப்பகுதியில் வனவிலங்குகள் மீட்பு, சிகிச்சை மற்றும், மறுவாழ்வு மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து, பின்பு புதுக்காடு பகுதியிலுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்றார்.



மேலும் அங்கிருந்து படகு மூலம் கூத்தாமுண்டி வடக்கு சுற்று வனப்பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு முகாமிற்கு சென்று வேட்டைத் தடுப்பு பணிகள் மற்றும் முகாம் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர்கள், சிறுமுகை வனச்சரகம், மேட்டுப்பாளையம் வனச்சரகம், கோவை ஆராய்ச்சி சரகம், வனப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...