குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு முன்னணி வானதி சீனிவாசன் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

குடியரசு தலைவர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரௌபதி முர்முவிற்கு வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இணைப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: இந்தியாவில் 15- வது குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார்.



இந்நிலையில் ஆர்.எஸ்.புரத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தை தொடங்கினர். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தை துவங்கினர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் நாட்டினுடைய குடியரசுத்தலைவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது எனவும் இதுவரை உள்ள நிலவரப்படி திரவுபதி முர்மு முன்னிலையில் உள்ளார் என தெரிவித்தார். சமூக நீதி என்பது வெறும் வார்த்தை அல்ல எனவும் சொல்லாடல் அல்ல எனவும் அதனை ஒவ்வொரு செயலிலும் செயல்படுத்தக்கூடிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக தெரிவித்தார்.

ஒடிசாவில் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து பெண்களும் கல்வி கற்க முடியும் என்பதை நிரூபித்து தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் கடைக்கோடி கிராமத்தின் உடைய பெண்மணியை நாட்டின் முதல் குடிமகளாக பார்க்க முடியும் என்கின்ற சூழ்நிலையை பாஜக உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வெற்றி முகத்தில் இருக்கக்கூடிய எங்களுடைய வேட்பாளர் தான் வெற்றி பெறப் போகிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நாட்டில் அனைவரும் காண வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்கும் ஆன சம வாய்ப்பு என்பதை நிலை நிறுத்துகின்ற கட்சியாக பாஜக கட்சியும்,பிரதமரும் உள்ளனர், என்பதை தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கோவையிலும் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வெற்றி கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் கூறினார். குறிப்பாக பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். எங்களுக்கு எதிராக நின்ற வேட்பாளர் தங்களை எட்ட முடியாத அளவிற்கு நாங்கள் முன்னிலையில் இருப்பதாக கூறிய அவர் தேர்தலுக்கு முன்பாகவே கூட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளும் கூட மிகப் பெரிய ஆதரவினை தங்களுடைய வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி ராமசாமி, பாஜக இளைஞரணி மாநில செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...