கோவை கிட்டாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது

கோவை, கிட்டாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை, அன்னூரை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் ராஜதுறை மற்றும் உதவி ஆய்வாளர் உதயச்சந்தின் தலைமையிலான போலீசார் கிட்டாம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் சுமார் 2.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது மூவரும் வாகராம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக்குமார் (20), சந்தோஷ் (24), சதீஷ்குமார் (32) என்பதும் தெரியவந்தது. மூவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...