கோவை, கிட்டாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை, அன்னூரை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் ராஜதுறை மற்றும் உதவி ஆய்வாளர் உதயச்சந்தின் தலைமையிலான போலீசார் கிட்டாம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் சுமார் 2.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது மூவரும் வாகராம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக்குமார் (20), சந்தோஷ் (24), சதீஷ்குமார் (32) என்பதும் தெரியவந்தது. மூவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் ராஜதுறை மற்றும் உதவி ஆய்வாளர் உதயச்சந்தின் தலைமையிலான போலீசார் கிட்டாம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் சுமார் 2.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது மூவரும் வாகராம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக்குமார் (20), சந்தோஷ் (24), சதீஷ்குமார் (32) என்பதும் தெரியவந்தது. மூவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.