கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை உத்தரவை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டால் முதல் முறை விற்பனை செய்வோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரித்து, அபராதம், சீல் வைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ரோந்து சென்றனர். அதில் 10 பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விறபனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 10 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மேலும் மறு முறை குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை உத்தரவை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டால் முதல் முறை விற்பனை செய்வோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரித்து, அபராதம், சீல் வைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ரோந்து சென்றனர். அதில் 10 பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விறபனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 10 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மேலும் மறு முறை குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.