கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு..!

அஜ்ஜனூர்‌ குட்டையில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதிகளை நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நகரமைப்பு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டுள்ளார்.


கோவை: விளாங்குறிச்சி, குமுதம்‌ நகர்‌, லைன்‌ கிளப்‌ காலனி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ சென்று பொதுமக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வாடு எண்‌.36, 37 மற்றும்‌ 38-க்குட்பட்ட வடவள்ளி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளார்களுக்கான வருகைப்பதிவேடுகள்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தூய்மைப்பணியாளார்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க அறிவுரை வழங்கி விழிப்புணாவு வேண்டுமெனவும்‌ அறிவுறுத்திய பின்னர், வடவள்ளி, குருசாமி நகர்‌ பூங்காவில்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்து ஆய்வு செய்து பூங்காவினை மேம்படுத்த திட்டமதிப்பீடு தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடர்ந்து, வடவள்ளி, குருசாமி நகர்‌, லட்சுமி நகர்‌, பொம்மனாம்பாளையம்‌ பிரிவு பகுதியில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணி முடிவுற்ற இடங்களை நேரில்‌ பார்வையிட்டு, குடிநீர்‌ குழாய்‌ அமைப்பதற்காகவும்‌ தோண்டப்பட்ட தார்சாலைகளை உடனடியாக செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு உத்தரவிட்டதைத்‌ தொடர்ந்து,



அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும்‌ கழிவுநீரைச் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அஜ்ஜனூர்‌ குட்டையில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதிகளை நிலஅளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நகரமைப்பு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட விளாங்குறிச்சி, குமுதம்‌ நகா்‌, லைன்‌ கிளப்‌ காலனி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பொதுமக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்கள்‌. அப்போது ஆணையாளர்‌ தெரிவித்ததாவது, விளாங்குறிச்சி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ வாரம்‌ ஒருமுறை செய்வதற்கும்‌, தற்போது விநியோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ அளவை அதிகரித்தும்‌, அதிக நாட்கள்‌ வழங்கவும்‌ பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌. மேலும்‌, அப்பகுதியில்‌ சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதியின்றி இணைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ இணைப்பைத் துண்டிக்கவும்‌, மோட்டார்‌ மூலம்‌ நீர் உறிஞ்சுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்‌, அப்பகுதியிலுள்ள தார்‌ சாலைகளை உடனடியாக செப்பனிடவும்‌, மழைநீர்வடிகால்‌ மற்றும்‌ பாதாள சாக்கடைக்கான புதிய திட்ட மதிப்பீடுகளை உடனடியாக தயாரிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள்‌ பத்மாவதி, கோவை பாபு (௭) மு.செல்வகுமார்‌, விஜயகுமார்‌, உதவி ஆணையாளர்கள்‌ முத்து இராமலிங்கம்‌, சேகர், உதவி செயற்பொறியாளர்கள்‌ சுந்தாராஜன்‌, ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ கலாவதி, ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்‌ சவிதா, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளர்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...