அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருப்பூர்: திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கடந்த 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் செல்லும் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக வருவாய்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகம் சீல் வைத்து அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதை கொண்டாடும் வகையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.