அதிமுக அலுவலகத்தின் சாவியை EPS-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - திருப்பூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருப்பூரில் அதிமுக தொண்டர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 11ஆம் தேதி அதிமுக அலுவலகம் செல்லும் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வன்முறை காரணமாக வருவாய்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகம் சீல் வைத்து அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதன்படி, இன்று எடப்பாடி பழனிசாமியிடம் அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.



இதை கொண்டாடும் வகையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...