மின் கட்டண உயர்வில் இருந்து குறுந்தொழிற் கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும் குறுந்தொழில் முனைவோரையும், அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும், பாதுகாத்து உதவும் வகையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறுந்தொழில் கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு கோருதல் தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியதாவது:-
கடந்த 18.07.2022 அன்று, தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குறுந்தொழில் கூடங்களுக்கான மின்சார உபயோக கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, குறுந்தொழில் முனைவோர் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மின்சார உபயோக கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும், நெருக்கடியில் தள்ளும் விதமாக அமைந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தாங்கள், குறுந்தொழில் முனைவோர்களின் சிரமங்களை கருத்திற்கொண்டு, மின் கட்டண உயர்வில் இருந்து குறுந்தொழிற் கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும் குறுந்தொழில் முனைவோரையும் அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும், பாதுகாத்து உதவும் வகையில் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறுந்தொழில்களை பாதுகாத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குறுந்தொழில் கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு கோருதல் தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியதாவது:-
கடந்த 18.07.2022 அன்று, தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குறுந்தொழில் கூடங்களுக்கான மின்சார உபயோக கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, குறுந்தொழில் முனைவோர் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மின்சார உபயோக கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு அவர்களை மேலும், நெருக்கடியில் தள்ளும் விதமாக அமைந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிய தாங்கள், குறுந்தொழில் முனைவோர்களின் சிரமங்களை கருத்திற்கொண்டு, மின் கட்டண உயர்வில் இருந்து குறுந்தொழிற் கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும் குறுந்தொழில் முனைவோரையும் அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும், பாதுகாத்து உதவும் வகையில் மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறுந்தொழில்களை பாதுகாத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.