கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) முதலமைச்சருக்கு வேண்டுகோள்..!

மின்‌ கட்டண உயர்வில்‌ இருந்து குறுந்தொழிற்‌ கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும்‌ குறுந்தொழில்‌ முனைவோரையும்,‌ அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌, பாதுகாத்து உதவும்‌ வகையில்‌ மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறுந்தொழில் கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு கோருதல் தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியதாவது:-

கடந்த 18.07.2022 அன்று, தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி, குறுந்தொழில்‌ கூடங்களுக்கான மின்சார உபயோக கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்று அறிவித்திருந்தார்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள்‌ விலை உயர்வு மற்றும்‌ பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால்‌ பாதிக்கப்பட்டு, குறுந்தொழில்‌ முனைவோர்‌ தங்கள்‌ தொழிலை தொடர்ந்து நடத்த கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்‌.

இந்நிலையில்,‌ மின்சார உபயோக கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற அறிவிப்பு அவர்களை மேலும்,‌ நெருக்கடியில்‌ தள்ளும்‌ விதமாக அமைந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆகிய தாங்கள்‌, குறுந்தொழில்‌ முனைவோர்களின்‌ சிரமங்களை கருத்திற்கொண்டு, மின்‌ கட்டண உயர்வில்‌ இருந்து குறுந்தொழிற்‌ கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும்‌ குறுந்தொழில்‌ முனைவோரையும்‌ அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌, பாதுகாத்து உதவும்‌ வகையில்‌ மின்‌ கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறுந்தொழில்களை பாதுகாத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...