கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம்..!

அரசு அறிவித்துள்ள மின்‌ கட்டண உயர்வு கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:-

கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாகவே கூலி உயர்வு இல்லாமல்‌, விசைத்தறியாளர்கள்‌ வாழ்வாதாரமே இல்லாமல்‌ பெறும்‌ போராட்டம்‌ நடத்தியும்‌, அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள்‌ நடத்தியும்‌, அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலி உயர்வே இன்னும்‌ முழுமையாக அமல்படுத்தாத சூழ்நிலையில்‌ கடந்த 6 மாதங்களாக நூல்விலை ஏற்றத்தினாலும்‌, இரண்டு மாதமாகத் தொழில்‌ முழுமையாக முடங்கிய நிலையில்‌ அரசு அறிவித்துள்ள மின்‌ கட்டண உயர்வு கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவும்‌, பேரிடியாகவும்‌ உள்ளது. விசைத்தறி தொழில்‌ உள்ள இன்றைய சூழ்நிலையில்‌ மின்‌ கட்டணமே கட்ட முடியாத நிலையில்‌ உள்ளோம்‌.

குறைந்த பட்ச கூலி உயர்வு பெற்றபோதும்‌ தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு விலைவாசி உயர்வு, போன்ற காரணத்தாலும்‌ தற்போது உயர்த்தியுள்ள யூனிட்க்கு 0.70 பைசா என்பது இதுவரை இல்லாத உயர்வாகும்‌.

கூலி விசைத்தறியாளர்கள்‌ குடும்ப வாழ்வாதாரத்தையும்‌, குடும்பமே உழைக்கும்‌ சூழ்நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டுதான்‌ கடந்த காலங்களில்‌ அரசு விசைத்தறியாளர்களுக்கு என்ற தனியாக சிலாப்‌ சிஷ்டத்துடன்‌ 111A2 என தனியாக டேரிப்‌ பிரித்து சலுகை வழங்கி வந்துள்ளது.

அதனால்‌ எங்கள்‌ தொழில்‌, மற்றும்‌ குடும்ப வாழ்வாதார சூழ்நிலையை கவனத்தில்‌ கொண்டு விசைத்தறியாளர்களுக்கு உயர்த்திய மின்‌ கட்டண உயர்வை எந்தவகையிலும்‌ கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறியாளர்கள்‌ ஈடு செய்ய முடியாத கட்ட முடியாத மின்‌ கட்டண உயர்வை அரசு 111A2 க்கு முழுமையாக விலக்கு அளித்து பல லட்சம்‌ கூலி விசைத்தறியாளர்கள்‌ குடும்ப வாழ்வாரதத்தையும்‌ விசைத்தறி தொழிலையும்‌ தொழிலாளர்களையும்‌ பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறுகோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...