கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்..!

பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார்.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு குப்பைகள் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படவில்லை.

இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...