கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்..!

பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார்.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு குப்பைகள் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படவில்லை.

இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...