தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மாவட்ட துணை இயக்குனர் அருணா தகவல்

அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஜூலை 18- ந்தேதி திங்கட்கிழமை முதல் வரும் 30ம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 'தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்' நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்' இரு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன் நோக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுப்பதே ஆகும், நம் நாட்டில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் தீவிர வயிற்று போக்கினால் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் ஜூலை 18-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள்.



மேலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.



இதனால் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மேலும் 5-வயது குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு [ஓ.ஆர்.எஸ்] பொட்டலம் வழங்கப்படும், இதன் மூலமாக மாவட்டத்தில் 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 107 பேர் பயன்பெறுவர் என்றும் எனவே 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்ப பெற்றோர்கள் இந்த முகாமிற்கு சென்று தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...