தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மாவட்ட துணை இயக்குனர் அருணா தகவல்

அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஜூலை 18- ந்தேதி திங்கட்கிழமை முதல் வரும் 30ம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 'தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்' நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்' இரு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன் நோக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுப்பதே ஆகும், நம் நாட்டில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் தீவிர வயிற்று போக்கினால் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் ஜூலை 18-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள்.



மேலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.



இதனால் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மேலும் 5-வயது குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு [ஓ.ஆர்.எஸ்] பொட்டலம் வழங்கப்படும், இதன் மூலமாக மாவட்டத்தில் 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 107 பேர் பயன்பெறுவர் என்றும் எனவே 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்ப பெற்றோர்கள் இந்த முகாமிற்கு சென்று தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...