உயிருக்கு அச்சுறுத்தல்.. கோவையில் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா..!

வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது புகாரளித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மீரா லோகநாதன், ராஜராஜேஸ்வரி, விஜயசந்திர லட்சுமி மற்றும் கிருஷ்ணாராஜ் ஆகியோர் இரு வழக்குகளில் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு வக்காளத்து மாற்றம் செய்ததோடு வழக்குகளில் தனது கையெழுத்தை போலியாக போட்டு சுமார் 20 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பார் கவுன்சிலில் புகாரளித்துள்ளார்.



இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் தனியார் விடுதிக்கு இது தொடர்பாக பேச அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பார்கவுன்சிலில் கொடுத்த புகாரை திரும்ப பெற நிர்பந்திப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...