வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது புகாரளித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மீரா லோகநாதன், ராஜராஜேஸ்வரி, விஜயசந்திர லட்சுமி மற்றும் கிருஷ்ணாராஜ் ஆகியோர் இரு வழக்குகளில் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு வக்காளத்து மாற்றம் செய்ததோடு வழக்குகளில் தனது கையெழுத்தை போலியாக போட்டு சுமார் 20 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பார் கவுன்சிலில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் தனியார் விடுதிக்கு இது தொடர்பாக பேச அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பார்கவுன்சிலில் கொடுத்த புகாரை திரும்ப பெற நிர்பந்திப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மீரா லோகநாதன், ராஜராஜேஸ்வரி, விஜயசந்திர லட்சுமி மற்றும் கிருஷ்ணாராஜ் ஆகியோர் இரு வழக்குகளில் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு வக்காளத்து மாற்றம் செய்ததோடு வழக்குகளில் தனது கையெழுத்தை போலியாக போட்டு சுமார் 20 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பார் கவுன்சிலில் புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் தனியார் விடுதிக்கு இது தொடர்பாக பேச அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பார்கவுன்சிலில் கொடுத்த புகாரை திரும்ப பெற நிர்பந்திப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.