உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்தவரின் உறவினர்களிடம் வாங்கியதால் பணியிடை நீக்கம்.
கோவை: கோவையில் உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ரூ.2-ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக இறந்த பாலமுருகன் உடலை வீட்டில் இருந்து மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்த பாலமுருகனின் உறவினர்களிடம் வாங்கியதாகத் தெரிகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்தவர் உறவினர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக இறந்த பாலமுருகன் உடலை வீட்டில் இருந்து மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்த பாலமுருகனின் உறவினர்களிடம் வாங்கியதாகத் தெரிகிறது.
இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்தவர் உறவினர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.