கோவையில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம்..!

கோவை முருகன்பதி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை கடந்த 30 நாட்களாக, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை முருகன்பதி கிராம விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது.



கோவை மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் உள்ள குழந்தைமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மற்றும் தென்னை கன்றுகளை சேதப்படுத்தி சென்றது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போதுகடந்த 30-நாட்களாக இரவு நேரங்களில் வரும் ஒற்றை காட்டு யானை தர்மராஜ், செந்திகுமார், குழந்தைமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 200-தென்னை மற்றும் வாழைகளை யானை சேதப்படுத்தியுள்ளது.



வாளையாறு ரயில் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர் யானையை விரட்டும் போது தங்களது விளை நிலத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், ரயில் பாதை வனப்பகுதியில் இருப்பதால் யானை வரும் போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...