நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
கோவை: ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ஆடி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், ஆடி வெள்ளி கிழமைகளில் தென் மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இதில், நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாசாணி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், ஆடி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால், ஆடி வெள்ளி கிழமைகளில் தென் மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இதில், நேற்று ஆடி முதல் நாளை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் கவசம் அணிவது போன்ற நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.