கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை – மளிகை கடைக்கு சீல் வைக்க உணவு பாதுகாப்பு துறையினருக்கு காவல்துறை பரிந்துறை…!

தொடர்ந்து எச்சரிக்கையை மீறி குட்காவை விற்பனை செய்து வரும் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என செட்டிபாளையம் போலீசார், உணவு பாதுகாப்பு துறையினருக்கு பரிந்துறை செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே பல முறை அபராதம், வழக்கு பதிவு செய்து எச்சரித்தும், சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல் வைக்க செட்டிபாளையம் போலீஸார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிடம் பரிந்துறை செய்துள்ளனர்.

கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் ( 62). இவர் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையில்,தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த புகார் அடிப்படையில், 3 முறை செட்டிபாளையம் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் மற்றும் வழக்கு பதிவு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட எஸ்,பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மீண்டும் இன்று செட்டிபாளையம் போலீஸ் உதவி ஆய்வாளர் சின்னகாமனன் தலைமையில்,மதுக்கரை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவானந்தம் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மீண்டும் அவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, தொடர்ந்து எச்சரிக்கையை மீறி குட்காவை விற்பனை செய்து வரும் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என செட்டிபாளையம் போலீசார் பரிந்துறை செய்துள்ளனர்.



தொடர்ந்து, குட்கா விற்பனை செய்யும் மளிகை கடைக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...