கோவையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 8 வழக்குகள் பதிவு - ரூ.40 ஆயிரம் அபராதம்….!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு சோதனையில், பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் இருந்து சுமார் 5.45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், முதல் முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கு ரூ 5 ஆயிரம், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ.10,000 மற்றும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தத.



அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு சோதனையில் ஈடுபட்டதில், பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் இருந்து சுமார் 5.45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...