கோவையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பழக்கடை வியாபாரி பலி..!

கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பழக்கடை வியாபாரி பலியான சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பழக்கடை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (38). இவர் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடிந்து தனது மகன் சுஹேல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, ஆத்துப்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றதாக தெரிகிறது. இதனால் ஷாஜகானும் பிரேக் பிடித்த போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது, இதில் படுகாயமடைந்த ஷாஜகானை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷாஜகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சுஹேல் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனும் சம்பவ இடத்தில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...