கோவையில் புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை: உடல்நிலை தேறியதால் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைப்பு..!

குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்பிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவையில் புதரில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடல்நிலை தேறியதால் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், SIHS காலனி பகுதியில் கடந்த ஜூன்-8 காலை 7.00-மணியளவில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அங்குள்ள புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

முதல்வர் நிர்மலா தலைமையில், குழந்தைகள் மருத்துவம் துறை தலைவர் கீதாஞ்சலி, செவிலியர்களின் தொடர் பராமரிப்பில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



தற்போது குழந்தையின் உடல் நலம் தேறிய நிலையில் எடை 1.5-கிலோவிலிருந்து, 2.06-கிலோவாக உயர்ந்தது. மேலும் குழந்தையின் உடல் நலம் சீராகி ஆரோக்கியமாக இருப்பதால், குழந்தை பராமரிப்புக்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் முதல்வர் மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...