அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சேதமடைந்த ஜமீன் ஊத்துக்குளி-நல்லூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நல்லூர் கிராமத்தில் இருந்து, பொள்ளாச்சி மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி வரையில் 2.5 கிலோமீட்டர் தூரம் பிரதான இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக அரசு பேருந்துகள் மட்டும் இன்றி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
இங்குள்ள தார் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதில் குறிப்பாக நல்லூரிலிருந்து சாலை தொடங்கும் இடத்தில் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், கிருஷ்ணா குளம் அருகே உள்ள டாஸ்மாக் எதிரே உள்ள சாலையில், ஆபத்தான வளைவு பகுதியில், குழிகள் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நல்லூர் கிராமத்தில் இருந்து, பொள்ளாச்சி மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி வரையில் 2.5 கிலோமீட்டர் தூரம் பிரதான இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக அரசு பேருந்துகள் மட்டும் இன்றி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.
இங்குள்ள தார் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதில் குறிப்பாக நல்லூரிலிருந்து சாலை தொடங்கும் இடத்தில் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், கிருஷ்ணா குளம் அருகே உள்ள டாஸ்மாக் எதிரே உள்ள சாலையில், ஆபத்தான வளைவு பகுதியில், குழிகள் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.