கோவை பொள்ளாச்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சேதமடைந்த ஜமீன் ஊத்துக்குளி-நல்லூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் சேதமடைந்த ஜமீன் ஊத்துக்குளி-நல்லூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலக்காடு ரோடு நல்லூர் கிராமத்தில் இருந்து, பொள்ளாச்சி மீன்கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளி வரையில் 2.5 கிலோமீட்டர் தூரம் பிரதான இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக அரசு பேருந்துகள் மட்டும் இன்றி, கனரக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது.

இங்குள்ள தார் சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளது. இதில் குறிப்பாக நல்லூரிலிருந்து சாலை தொடங்கும் இடத்தில் தார்ச்சாலை முற்றிலுமாக சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.



மேலும், கிருஷ்ணா குளம் அருகே உள்ள டாஸ்மாக் எதிரே உள்ள சாலையில், ஆபத்தான வளைவு பகுதியில், குழிகள் ஏற்பட்டுள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் இந்த சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...