மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா..? - கோவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கலந்துரையாடல்

கோவை வந்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷான் ராவ், ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் பயனாளிகளுக்கு தாமதமின்றி முறையாக சென்றடைகிறதா..? என்பது குறித்து கேட்டறிந்தார்.



கோவை: மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷான் ராவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். அதில் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் திட்ட பணிகளில் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.



அப்போது, வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்கள், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள், தொழில் தொடங்க வழங்கப்படும் நிதி உதவிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி திட்டங்கள் சென்றடைகிறதா..? மற்றும் வங்கிகளின் செயல்பாடுகளை குறித்தும் ஆய்வு செய்தார்.



அப்போது பேசிய அவர், பிரதமர் சிறு தொழில் புரிவோர்களுக்கும், நடைபாதை வியாபாரிகளுக்கும் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனை நடுத்தர மக்களுக்கு வழங்குவதற்கு வங்கிகள் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



மேலும், செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் கோவைக்கு வருகை தந்து வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், வருவாய் அலுவலர் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...