கோவை பொள்ளாச்சி பகுதியில் 5-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டு, 47-வயது கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் 5-வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே ஒரு கிராமத்தில் 5-வயது சிறுமியின் தாய் சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

மாலை அவர் வீடு திரும்பி போது அதே பகுதியைச் சேர்ந்த 47-வயது கூலித் தொழிலாளி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்ததை கண்டுள்ளார். பின்னர், சிறுமியிடம் சென்று விசாரித்தபோது, அந்த நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...